Wednesday, September 6, 2017

வள்ளுவனும்...எடுத்துக்காட்டுகளும் - 2

நமக்கு உள்ள பெயர் நம் உடலுக்கா? உயிருக்கா?

உயிருக்கு என்றால்..நாம் தினசரி விடும் மூச்சுக் காற்றிற்கா?

உடலுக்கு என்றால்...நாம் இறந்ததும் ஏன் நம் உடலை "Body"  என் கிறார்கள்.

அதாவது..உயிர்..உடலில் உள்ளவரை ராமநாதன்.உயிர் பிரிந்ததும் உடல் அந்தப் பெயரை இழந்துவிடுகிறது.

உயிரும்..உடலும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கிறது.

அதே போல ஒருவர் அன்புடையவராய் இருபபராயின், அவருடன் அதற்கான அன்பு செயல்களும் இருக்குமாம்.

இதைத்தான் வள்ளுவர்

அன்புடமை என்னும் அதிகாரத்தில்

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு  - 73

என்கிறார்.

அதாவது, ஒருவர் அன்புடையாராய் இருந்தால் அவருடன் கண்டிப்பாக அன்பிற்கான செயல்களும் இணைந்திருக்குமாம்.அது எப்படியென்றால் நம் உயிருடன் இணைந்திருக்கும் உடல் போலவாம்

அன்பையும் , செயலையும்...உயிருக்கும் உடலுக்கும் ஒப்பிடுகிறார்

நாளை வேறு ஒரு குறளுடன் சந்திப்போம்

No comments: