Sunday, June 1, 2008

108.கயமை

1.மனிதர்களிடம் மட்டும் தான் நல்லவர்கள் போல காட்டிக்கொள்ளும் கயவர்களைக் காணமுடியும்.

2.எப்போதும் நல்லதையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களைவிட எதைப்பற்றியும் கவலையற்ற கயவர்கள்
ஒரு விதத்தில் பாக்யசாலிகள்.

3.புராணங்களில் வரும் தேவர்கள் போல..தங்கள் மனம் போன போக்கில் கயவர்களும் செல்வதால் அவர்கள்
இருவரும் சமம் எனலாம்.

4.கீழ் மக்கள்..தங்களைவிட கீழ்மக்களைக் கண்டால்..அவர்களைவிட நாம் நல்லவர்கள் என கர்வம் அடைவர்.

5.கீழ் மக்கள் தாங்கள் விரும்புவது கிடைத்தால் ஒழுக்கம் உள்ளவர் போல காட்டிக்கொள்வர்.மற்ற நேரங்களில்
பயம் காரணமாக உத்தமர் போல நடிப்பர்.

6.மறைக்கப்பட வேண்டிய ரகசியம் ஒன்றைக் கேட்டதும்..பிறரிடம் வலிய போய் சொல்வதால்..கயவர்களை
பறை என்ற கருவிக்கு ஒப்பிடலாம்.

7.முரடர்களுக்கு கொடுத்தாலும் கொடுப்பார்களே அன்றி ..ஈகை குணமற்ற கயவர்கள் ஏழை,எளியவர்க்கு
எச்சில் கையையும் உதற மாட்டார்கள்.

8.குறைகளை சொன்னதும்..சான்றோரிடம் பயன் பெற முடியும்.ஆனால் கயவர்களோ கரும்பு போல நசுக்கிப்
பிழிந்தால்தான்..பயன்படுவர்.

9.பிறர் உடுப்பதையும்..உண்பதையும் கண்டு அவர் மேல் பொறாமைக் கொண்டு..வேண்டுமென்றே அவர் மேல்
குறை சொல்வர் கயவர்.

10.துன்பம் வரும் போது..அதற்காக தம்மையும் விற்க தயாராய் இருப்பவரே கயவர்கள் ஆவார்கள்.

1 comment:

கோவை விஜய் said...

கயவ்ர்கள் பற்றிய கருத்துக்கள் அருமை

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/