Thursday, May 29, 2008

100.பண்புடைமை

1.யாராயிருப்பினும்..அவரிடம் எளிமையாகப் பழகினால்..அதுவே சிறந்த ஒழுக்கமான பண்புடைமை ஆகும்.

2.அன்புடையவராக இருத்தல்..உயர் குடியில் பிறந்த தன்மை ஆகிய இரண்டும் பண்புடையராக வாழ நல்வழியாகும்.

3.உடலால் ஒத்திருந்தாலும்..நற்பண்பு அற்றவர்களை மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியாக இருக்காது.

4.நீதி வழுவாமை,நன்மை செய்தல், என பிறர்க்கு பயன்படப் பணியாற்றுவர்களின் நற் பண்பை உலகு பாராட்டும்.

5.விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுதல் துன்பம் தருவதாகும்.பகைவரிடம் பண்பு கெடாமல் நடக்க
வேண்டும்.

6.பண்பாளர்களைச் சார்ந்து உலக நடமுறைகள் இயங்க வேண்டும்.இல்லையேல் அவை நாசமாகிவிடும்.

7.அரம் போல கூர்மையான அறிவு உடையவர் ஆனாலும்..உரிய பண்பற்றவர் மரத்துக்கு ஒப்பானவர் ஆவார்கள்.

8.நட்புக்கு ஏற்றவராய் இல்லாமல்..தீமை செய்பவரிடம்..பொறுமை காட்டி பண்புடையவராய் நாம் நடக்க வேண்டும்.

9.பிறருடன் நட்புக் கொண்டு பழகி, மகிழ முடியாதவர்க்கு..உலகம் பகலில் கூட இருட்டாகவே இருக்கும்.

10.பாத்திரம் சுத்தமாய் இல்லாவிட்டால்,அதில் ஊற்றும் பாலும் கெட்டு விடுவது போல..பண்பற்றவர் செல்வமும்
பயனற்றதாகும்.

No comments: