Friday, May 30, 2008

104.உழவு

1.உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும்..ஏர்த்தொழிலின் பின் நிற்பதால்
உழவுத்தொழிலே சிறந்ததாகும்.

2.பல தொழில்கள் புரிபவர்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத்தொழில்
இருப்பதால்.. உலகத்தார்க்கு அதுவே அச்சாணியாகும்.

3.உழுதுண்டு வாழ்பவரே உரிமையோடு வாழ்பவர்கள்..ஏனெனில் மற்றவர்கள் பிறரிடம் வேலைசெய்து சம்பாதித்து
உண்பவராக இருப்பதால். 4.பல அரசுகளின் குடைநிழல்களை தம் குடையின் கீழ் கொண்டு வரும்
வலிமை உழவர்களுக்கே உண்டு.

5.தானே தொழில் செய்து சம்பாதித்து உண்ணும் இயல்புடையவர் பிறரிடம் கையேந்தார்..
தம்மிடம் வேண்டி நிற்போருக்கும் ஒளிக்காமல் வழங்குவர்.

6.பற்றை விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகளும் உழவர்களின் கையை
எதிர்பார்த்தே வாழவேண்டும்.

7.ஒரு பலம் புழுதி...கால் புழுதி ஆகும்படி நன்கு உழுது காயவிட்டால் ஒரு பிடி எருவும்
போடாமலேயே பயிர் செழித்து வளரும்.

8.உழுவது உரம் இடுதல் நன்று..களைஎடுப்பது..நீர்பாய்ச்சுதல் மிகவும் நல்லது.
அதைவிட பயிரை பாதுகாப்பது மிகமிக நல்லது.

9.உழவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் இருப்பானேயாயின்..அந்நிலம் ..மனைவிபோல
பிணங்கு கொண்டு அவனை வெறுக்கும்.

10.வாழ எந்த வழியும் இல்லை என சோம்பித் திரிவாரைப் பார்த்து..பூமித்தாய்
கேலியாய் சிரிப்பாள்.

No comments: