Friday, May 30, 2008

102.நாணுடைமை

1.தகாத செயல் செய்து நாணுவதற்கும்..நல்ல பெண்ணின் இயல்பான நாணத்திற்கும் வேறுபாடு உண்டு.

2.உணவு,உடை எல்லாம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது..ஆனால் மாண்பு மட்டுமே மக்களின் சிறப்பு இயல்பு.

3.உடலுடன் உயிர் இணைந்து இருப்பது போல..மாண்பு எனப்படுவது நாண உணர்வோடு இணைந்து இருப்பது.

4.சான்றோர்க்கு நாணுடைமை அணிகலனாக அமையும்.நாணுடைமை அற்றோர்.. பெருமிதமாக நடக்கும் நடையே
நோய்க்கு ஒப்பானதாகும்.

5.தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றி..பிறர்க்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் பண்பிற்கு உறைவிடமாவர்.

6.பரந்த உலகில் நாணம் என்னும் வேலியே சிறந்த பாதுகாப்பாக கொள்ள வேண்டும்.

7.நாண உணர்வுள்ளவர்கள் மானத்தைக்காக்க உயிரையும் விடுவர்.உயிரைக் காக்க மானம் இழக்க மாட்டார்கள்.

8.வெட்கப்படும் அளவு பழி ஏற்படுமேயானால்..அதற்கு வெட்கப்படாதவர்களை விட்டு அறநெறி அகலும்.

9.கொள்கை தவறினால் குலத்துக்கு இழுக்கு..பிறர் பழிக்கும் செயல் செய்யின் நலமனைத்தும் கெடும்.

10.கயிறு கொண்டு பொம்மையை உயிர் இருப்பது போல ஆட்டிவைக்கப்படுவதற்கும்..நாண உணர்வற்றவர்களுக்கும்
வேறுபாடு இல்லை.

No comments: