Friday, May 2, 2008

53.சுற்றந்தழால்

1.ஒருவன் வறுமை அடைந்த நேரத்திலும்..அவனிடம் பழைய உறவைப்
பாராட்டிப் பேசுபவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.
2.அன்பு குறையா சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் ..அது வளர்ச்சி குறையாத
ஆக்கத்தை கொடுக்கும்.
3.சுற்றத்தாரோடு கலந்து பழகும் தன்மை இல்லாதவன் வாழ்வு..கரையில்லா
குளத்தின் நீர் போல பயனற்றது ஆகும்.
4.சுற்றத்தாரோடு தழுவி அன்புடன் வாழ்தல்..ஒருவனுக்கு பெரும் செல்வத்தைப்
பெற்ற பலனைத் தரும்.
5.கொடைத் தன்மையும்,இன் சொல்லும் கொண்டவனை சுற்றத்தார் சூழ்ந்து
கொண்டேயிருப்பார்கள்.
6.பெரும் கொடையாளியாகவும்,கோபமற்றவனாகவும் ஆகிய ஒருவன் இருந்தால்
அவனைப்போல சுற்றம் உடையவர் உலகில் இல்லை எனலாம்.
7.காக்கை தன் சுற்றத்தாரைக் கூவி அழைத்து உண்ணும்.அந்தக் குணம் பெற்றோருக்கு
உலகில் உயர்வு உண்டு.
8.அனைவரும் சமம் என்றாலும்..அவரவர் சிறப்புக்கு ஏற்றார்போல பயன்படுத்தப்
படுவார்களேயானால், அந்த அரசுக்கு அரணாக மக்கள் இருப்பர்.
9.உறவு..ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்தால்..அந்தக் காரணம் சரியில்லை என
உணர்ந்ததும் மீண்டும் உறவு கொள்வர்.
10.ஏதோ காரணத்தால் பிரிந்து..மீண்டும் வந்து இணைபவரை..ஆராய்ந்து..
பின்னரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

No comments: