Thursday, May 29, 2008

99.சான்றாண்மை

1.ஆற்றவேண்டிய கடமை இவை என உணர்ந்து சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம்
இயல்பான கடமை ஆகும்.

2.நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கு அழகாகும்..வேறு எதுவும் அழகல்ல.

3.அன்பு,நாணம்,ஒழுக்கம்,இரக்கம்,வாய்மை என ஐந்து பண்புகளும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.

4.தவம் என்பது ஒரு உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது.பிறர் செய்யும் தீமைகளை
சுட்டிக்காட்டாத பண்பே சால்பு.

5.ஆணவமின்றி பணிவுடன் நடத்தலே..ஆற்றலாளரின் ஆற்றல்..அதுவே பகையை பகையிலிருந்துமாற்றும் கருவியாக
அமையும்.

6.ஒருவரின் மேன்மைக்கு உரைகல் போல மதிப்பிடும் கருவி..தாழ்ந்தோரிடத்திலும் ஏற்படும் தோல்வியைக் கூட
ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம்தான்.

7.துன்பத்தை செய்தவர்க்கும் நன்மை செய்வதே சான்றாண்மை எனும் நல்ல பண்பாகும்.

8.சால்பு என்ற வலிமையை உடையவர்களுக்கு வறுமை என்பது இழிவு தரக்கூடியது அல்ல.

9.கடமைகளை கண்ணியத்துடன் ஆற்றுகிற சான்றோர் ஊழிக்காலம் ஏற்பட்டாலும்..தம் நிலை மாறாமல் கடல்போல
திகழ்வர்.

10.சான்றோரின் நற்பண்பு குறையத் தொடங்கினால்...அதை இவ்வுலகு பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.

No comments: