Friday, May 30, 2008

103.குடிசெயல்வகை

1.கடமையைச் செய்வதில் சோர்வு காணாதவனுக்கு அப்பெருமையைவிட..வேறொரு பெருமை கிடையாது.

2.முயற்சி, நிறைந்த அறிவு கொண்டு அயராது பாடுபட்டால்..அவனைச் சார்ந்த குடிமக்கள் பெருமை உயரும்.

3.என் குடியை உயரச் செய்வேன் என முயலும் ஒருவனுக்கு..இயற்கையின் ஆற்றல் தானே முன் வந்து துணை
செய்யும்.

4.தம்மைச் சார்ந்த குடிமக்களை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு, முயல்வோருக்கு வெற்றி
வந்து குவியும்.

5.குற்றம் அற்றவனாய்..குடி உயரும் செயல் செய்து வாழ்பவனை உறவு போல கருதி சுற்றம் சூழ்ந்துகொள்ளும்.

6.நல்லபடி ஆளும் திறமை பெற்றவர்..பிறந்த குடிக்கு பெருமை சேர்ப்பர்.

7.போர்க்களத்தில் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் அஞ்சா வீரர் போல,குடிமக்களை தாங்கும் பொறுப்பும் ஆற்றலுள்ளவர்க்கு உண்டு.

8.குடி உயிர செயல் செய்கிறவனுக்கு காலம் என்று ஒன்று இல்லை.சோம்பல் கொண்டு தயங்கினால் குடிமக்கள்
நலன் கெடும்.

9.குடிமக்களுக்கு வரக்கூடிய குற்றத்தை வராது நீக்க முயலுபவன்..அவனைப் பொறுத்தவரை துன்பத்தைத்
தாங்கிக்கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.

10.துன்பத்தை எதிர் நின்று தாங்கும் ஆற்றலுள்ளவர் இல்லாத குடியை..அத்துன்பம் வெட்டி வீழ்த்திவிடும்

No comments: