Thursday, May 29, 2008

101.நன்றியில் செல்வம்

1.ஒருவன் பெரும் பொருளைச் சேர்த்து அதை அனுபவிக்காமல் இறந்து போனால்..சேர்க்கப்பட்ட செல்வத்தால் பயன் என்ன?

2.பொருளால் எல்லாம் முடியும் என..பிறர்க்கு எதுவும் கொடுக்காமல் செல்வத்தை பற்றிக்கொண்டிருப்பவன்..எச்சிறப்பும் அற்றஇழிபிறவி ஆவான்.

3.பொருளை சேர்ப்பதே குறியாக இருப்பவர்கள்..பிறந்து வாழ்வதே பூமிக்கு சுமையாகும்.

4.யாராலும் விரும்பப்படாதவன்..மரணத்திற்குப்பின் எஞ்சி நிற்பது எது என எதை நினைத்திட முடியும்.

5.ஒருவருக்கு கொடுப்பதன் மூலம் அடையும் இன்பத்தை அறியமுடியாதவனிடம்..கோடி கோடியாக பணம் இருந்தும் பயன் இல்லை.

6.தானும் அனுபவிக்காது..தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்பவன் ..அவனிடம் உள்ள செல்வத்துக்கு ஒரு நோய் போல ஆவான்.

7.வறியவர்க்கு ஏதும் உதவாதவன் செல்வம்..அழகானப்பெண் ஒருத்தி தனித்திருந்து முதுமை அடைவதைப் போன்றது.

8.பிறர்க்கு உதவாதவன் செல்வம்..ஊர் நடுவில் எதற்கும் உதவாத நச்சு மரத்தில் பழுத்துள்ள பழம் போல
உபயோகமற்றது.

9.அன்பும் இன்றி,தன்னையும் வருத்தி..அறவழிக்கு புறம்பாய் சேர்க்கும் செல்வத்தை பிறர் கொள்ளை கொண்டு
போய்விடுவர்.

10.நல்ல உள்ளம் கொண்ட செல்வர்களின் சிறிய வறுமை என்பது..உலகத்தைக் காக்கும் மழைமேகம் வறுமை
மிகுந்தாற் போன்ற தன்மையுடையதாம்.

No comments: