Tuesday, May 6, 2008

57.வெருவந்த செய்யாமை

1.ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து மீண்டும் அக்குற்றம் செய்யாதப்படி..குற்றத்துக்கு பொருந்துமாறு
தண்டிப்பவனே அரசன்.
2.குற்றங்கள் நிகழாமல் இருக்க..தண்டிக்கும்போது அளவுக்கு அதிகமாக நடந்துக்கொள்வது போலக் காட்டி
..அளவு மீறாமல் நடக்க வேண்டும்.
3.குடிமக்கள் அஞ்சும்படியாக நடக்கும் அரசு..விரைவில் அழியும்.

4.நம் தலைவன் கடுமையானவன்..என குடிமக்கள் கருதினால்..அந்த அரசு தன் பெருமையை விரைவில்
இழக்கும்.
5.கடுகடுப்பும்,இனிமையற்ற முகமும் உடையவன் செல்வம் பேயைப்போல அஞ்சத்தக்க தோற்றத்துக்கு ஒப்பாகும்.

6.கடுஞ்சொல்லும்,இரக்கமற்ற உள்ளமும் கொண்டவன் செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும்.

7.கடுஞ்சொல்லும்,முறையில்லா தண்டனையும் அரசின் வெற்றிக்கான வலிமையை தேய்க்கும் கருவியாக அமையும்.

8.அமைச்சர்களுடன் கலந்து முடிவெடுக்கா அரசன்..சினத்துக்கு ஆளாகி நிற்பதுடன்,புகழையும் இழப்பான்.

9.முன்னரே உரிய பாதுகாப்பு இல்லாத அரசன்..போர் வந்துவிட்டால் தற்காப்பு இல்லாது விரைவில் வீழ்வான்.

10.கொடுங்கோல் மன்னன் படிக்காதவர்களை, இந்த பூமிக்கு பாரமாய் தனக்கு பக்க பலமாய் ஆக்கிக்கொள்வான்.

No comments: