Friday, January 5, 2018

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 9

ஒருவன் ஏதேனும் தவறிழைத்து விட்டால் உடன் நாம் அவனை வசை பாடுகிறோம்.இது இயற்கை
ஆனால்...அன்பினால் ஒருவனைத் திருத்த முடியும்.அன்பினால் ஒருவன் மனம் மாறி நல்லவனாக, தவறிழைக்காதவனாக ஆகக் கூடும்.
மேலும், வசைபாடும் நம் போன்றோர் மனநிலையையும் நாம் அன்புடன் நடக்கையில் அந்த அன்பு சாந்தப்படுத்தும்.
இதைத்தான் வள்ளுவர் கூறுகிறார்..
இனிமையான பழங்கள் நிறைந்த சோலை.அதனுள் செல்பவன் அக்கனிகளைப் பறித்து உண்பானா? அல்லது..கனியாத சற்றே கசப்புடன் கூடிய காயை எடுத்து உண்பானா?
கனிக்குத்தானே முக்கியத்துவம் கொடுப்பான்.அதுபோலத்தான்..கனி போன்று இனிக்கும் இனிய சொற்கள் உள்ளபோது,..காயைப்போல கசப்பை ஏற்படுத்தும் வன் சொற்கள் எதற்கு என்கிறான்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக்  காய்கவர்ந் தற்று  - 100

இனிமையான சொற்கள் இருக்கும் போது அவற்றை விடுத்துக் கடுமையாக பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்

இனிய சொற்களை கனிக்கும்.. கடுமையான சொற்களை காய்க்கும் ஒப்பிடுகிறான்