Wednesday, May 28, 2008

97.மானம்

1.இன்றியமையாத செய்ய வேண்டிய செயல்கள் என்றாலும்..அவற்றால் குடிப்பெருமை குறையுமானால்..
அச்செயல்களை தவிர்த்திட வேண்டும்.

2.புகழ் மிக்க வாழ்க்கையை விரும்புகிறவர்..தனக்கு புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களை
செய்யமாட்டார்கள்.

3.உயர் நிலை அடையும்போது அடக்க உணர்வும்..அந்நிலை மாறும்போது அடிமையாக நடக்காத மான உணர்வும்
வேண்டும்.

4.மக்கள் உயர் நிலையில் இருந்து..மானமிழந்து தாழ்ந்திடும்போது..தலையிலிருந்து உதிர்ந்த முடிக்கு சமமாக
கருதப்படுவர்.

5.மலைபோல் உயர்நிலையில் உள்ளவரும்..ஒரு குன்றிமணி அளவிற்கு இழிவான செயலில் ஈடுபட்டால்
தாழ்ந்து போய் விடுவார்கள்.

6.ஒருவரின் இகழ்வையும் பொறுத்துக்கொண்டு..மானத்தையும் விட்டுவிட்டு பணிந்து செல்வதில் எந்த
புகழோ,பயனோ கிடைக்காது.

7.மதியாதோர் பின் சென்று உயிர் வாழ்வதைவிட ,செத்து ஒழிவது சிறந்ததாகும்.

8.ஒருவரின் சிறப்பு கெடும்போது..அவர் உடம்பை மட்டும் காத்து வாழ்வது என்பது இழிவான செயலாகும்.

9.தன் உடலில் இருந்து உரோமம் நீங்கினாலும்,கவரிமான் உயிர் வாழாதாம்.அதுபோல உயர்ந்த மனிதர்கள்
மானம் போனால் உயிரையே விட்டு விடுவார்கள்.

10.மானம் போயிற்றே என உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் புகழை உலகு போற்ரும்.

2 comments:

வடுவூர் குமார் said...

சிறிய அட்டகாசமான விளக்கங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி குமார்