Friday, May 10, 2019

வள்ளுவனும் ஒப்பீடுகளும் - 15

ஒரு விளைச்சல் நிலம் ..அது மட்டுமே பயிர் விளைச்சலுக்குப் போதுமா?

அதில் ஊன்றிடும் விதை நல்ல முற்றிய, செடியிலேயே காய வைத்து எடுத்த விதையாக இருக்க வேண்டும்.

அதை அந்த நிலத்தில் விதைத்து விட்டு..அந்த விதை விளைய அதற்கான தண்ணீரை தினசரி விட வேண்டும்.களை எடுக்க வேண்டும்..சூரிய ஒளி படரும் இடமாய் இருந்திட வேண்டும்

இப்படி நிலம்,விதை,தண்ணீர், களை, சூரிய ஒளி இவை ஐந்தும் இருந்தால் விளைச்சல் ஓஹோ..

அது போல துறவறம் மேற்கொள்பவர்கள் ஐம்பொறிகளையும் உறுதியுடன் , அடக்கிக் காத்தால் அதுவே அவர்களின் துறவறத்தின் சிறப்பு ஆகும்

இதையே வள்ளுவர்

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (24)

என்கிறார்.

(உறுதி என்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்)

No comments: