Thursday, May 16, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 19

வள்ளுவன் தனை உலகத்திற்கு அளித்த வான் புகழ் தமிழ்நாடு.
உண்மை.
அவர் படைத்த திருக்குறளில் சொல்லாதவையேக் கிடையாது.
அதுவும், அவர் சொல்ல வந்ததை, அனைவரும் அறியும் வண்ணம் சொன்னவர்.
உதாரணத்திற்கு "நடுவு நிலைமை"
அதிகாரம்.
ஆரம்பக் குறளே.."நடுவு நிலைமை" என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்டது.

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின் (111)

பகைவர்,அயலோர்,நண்பர் எனப்பகுத்துப் பார்த்து, ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவு நிலைமை ஆகும்.

சரி எடுத்துக்காட்டு வரிசையில் இக்குறளில் என்ன இருக்கிறது? என் கிறீர்களா.

இதே அதிகாரத்தில் வரும் இக்குறளைப் பாருங்கள்.

ஒரு தராசு இருக்கிறதே அதன் முள் ஒருபக்கமாகவே சாய்ந்து விடாமல் சரியான இடப்படும் கல்லிற்கு ஏற்ப சரியான எடையினைக் காட்டுகின்றதோ..அதே போல நியாயம் கூறுவதே நடுவுநிலை என் கிறார்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி (118)

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதே உண்மையான நடுவு நிலைமைக்கு அழகாகும்   

No comments: