Tuesday, May 21, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளூம் - 22

வேதம் ஓதும் அந்தணர்கள் வேதம் ஓதுவதை மறந்தாலும், பின்னர் அதைக் கற்றுக் கொண்டு மீண்டும் ஓதலாம்.ஆனால்..அவர்கள் ஒழுக்க நெறியிலிருந்து தவறுவாராயின் அவர்களது குலமே கெட்டுப்போகுமாம்.

வள்ளுவன் இப்படிச் சொல்கிறார் ஒரு குறளில்..

அதை இப்போது சொல்வதானால்..கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் யாராய் இருந்தாலும்..தான் கற்றதை மறந்துவிடுவார்களானால்.மீண்டும் கற்றுக் கொள்ளலாம்.

அதுபோல ஒழுக்கத்தைச் சொல்ல முடியாது.

ஒழுக்க நெறியிலிருந்து யார் சற்று தவறினாலும்,அத்தவறு..அவரை மட்டும் பாதிக்காது..அவர்கள் சார்ந்த குலத்திற்கேக் கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடும்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் (134)

அந்தணன் ஒருவன் தான் கற்றதை மறந்துவிடுவானாயின், மீண்டும் படித்துக் கொள்ள முடியும்.ஆனால், பிறப்பிற்குச் சிறப்பினைச் சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறுவானாயின் அவன் இழிமகனே ஆவான்

(ஒழுக்கம் எல்லாவற்றினையும் விட முக்கியமானதாகும்)

No comments: