Friday, May 31, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 30

நீரின்றி அமையாது உலகு..

அந்த நீரை இயற்கை மரங்கள், கடல், நீர்நிலைகள், சூரிய ஒளி போன்றவற்றின் மூலம் கரு மேகங்களாக மாற்றி..அந்தந்த காலகட்டங்களில் மழையாக மீண்டும் பூமிக்குத் தந்து மக்களை வாழவைக்கின்றது.

சரியான நேரத்தில் மழை பொழியவில்லையாயின்..மக்கள் தண்ணீருக்கு அலைய வேண்டிய நிலை உருவாகிறது.

ஆனால்..மழை இதையெல்லாம் எண்ணிப்பாராது, தன்னால் மக்கள் பயன் அடைகிறார்களே..என அதற்குக் கைமாறாக மக்களிடமிருந்து பதிலுக்கு ஏதும் எதிர்பாராமல் பொழிகிறது.


 பதிலுக்கு ஏதும் எதிர்பாராமல் உதவுபவர்கள்  அந்த மழைக்கு ஒப்பானவர்கள் ஆவார்களாம்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு (211)

பிரதிபலனை எதிர்பார்த்து மழை பொழிவதில்லை.அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்

No comments: