Wednesday, May 15, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 18

பல்லாயிரக்கான...இல்லை ..பல லட்சங்கள்...இல்லை பல கோடிகள்..இல்லை..இல்லை..பல்லாயிரக்கணக்கான கோடி ஜீவராசிகள் இவ்வுலகில் வாழ்ந்து வருவது கண்கூடு.

அப்படிப்பட்ட இவ்வுலகு எவ்வளவு பெரியது..

ஆனால்..வள்ளுவனுக்கோ இவ்வுலகை விட பெரியதாக ஒன்று இருப்பதாகத் தோன்றுகிறது.

அது என்னவாகயிருக்கும் எனப் பார்ப்போமா?

ஒருவருக்கு தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி..எவ்வளவு சிறிதாயினும் அது உலகத்தைவிடப் பெரிதாம்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது (102)

என்கிறார்.

(தேவைப்படும் காலத்தில் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரியதாக மதிக்கப்படும்)

No comments: