Sunday, May 19, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 20

இயற்கை..

இது நமக்கும்..நம் வாழ்வுமுறைக்கும் ஏராளமானவற்றைத் தாங்கி உள்ளது.

மரங்கள், மலைகள், நதிகள்..ஆகிய எல்லாம் நாம் உயிர் வாழ்வதற்கும், தேவையான மழை பொழிவிற்கும் சொல்லணா சேவை புரிந்து வருகின்றன .

அவற்றை நமது சௌகரியத்திற்காக கொஞ்சம்..கொஞசமாய் அழித்துக் கொண்டு வருகிறோம் என்பதை நாம் உணர மறுக்கிறோம்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

மலையை விடச் சிறந்தது என்று உள்ளதாம் வள்ளுவனுக்கு.

அது என்ன தெரியுமா?

உறுதியான உள்ளம்..மற்றும் ஆர்ப்பாட்டமில்லா அடக்க உணர்வாம்.

இதையே நம் முன்னோர்கள்..மனதில் உறுதி வேண்டும், நிறைகுடமாய் திகழ்ந்தாலும் அடக்க உணர்வு வேண்டும் என்றெல்லாம் கூறிச் சென்றுள்ளனர்

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது (124)

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடகக் உணர்வும் கொண்டவரின் உயர்வு மலையைவிடச் சிறந்ததாகும் 

No comments: