Thursday, May 9, 2019

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 14

உடல்,கண், காது, மூக்கு, வாய் என ஐம்பொறிகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உண்டு.

அவற்றில் ஒன்று சரியாக இயங்கவில்லையாயினும் துயரம்தான்.

அதேபோன்ற நிலை...

பேராற்றலும்,பண்பும் கொண்ட ஒருவனை வணங்கி நடக்காதவன் நிலையுமாம்.

இதையே வள்ளுவர்

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (9)


(இக்குறள் கடவுள் வாழ்த்தாய் ,முதல் அதிகாரத்தில் வருவதால்..இறைவனின் திருவடிகளை வணங்காத தலை, புலன்கள் இல்லா பொறிகள் போல எனக் கொள்ளலாம்)


அடுத்து..வாழ்க்கையை பெருங்கடல் என்கிறார்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் (10)

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், இறைவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

No comments: