Saturday, May 25, 2019

வள்ளுவனும்...ஒப்பீடுகளும் - 25

உடலில்..காற்று வந்து போய்க் கொண்டிருந்தால்தான் உயிர் இருக்கும்.உணர்வுகள் இருக்கும்.

அந்த மூச்சுக்காற்றினை உடல் இழந்ததுமே...அந்த உடலுக்கான பெயர் மறைந்து பிணம் என்றப் பெயரினைப் பெற்றிடும்.

ஆனால்..அந்த உயிருக்கான மூச்சு வந்து போய்க் கொண்டிருந்தாலும்..உடலுக்கு பிணம் என்ற பெயர் வந்திடுமாம்.

எப்போது தெரியுமா?

நம்மை நம்பிப் பழகியவரின் மனைவியிடம் ஒருவன் தகாத செயல்களில் ஈடுபடுகையில், அவன் பிணமாகிவிடுகிறானாம்.

விளிந்தாரின் வேறல்லர் மறை தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார் (143)

நம்பிப் பழகியர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகின்றவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

No comments: