Monday, May 13, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 17

அமிழ்தம்..சுவையானது.
பாற்கடலைக் கடையும் போது அமிழ்தம் வந்ததாகக் கதையும் உண்டு.
தமிழுக்கும் அமிழ்தென்று பெயர்.தமிழ்மொழியினை பேசிக் கேட்க,படிக்க அவ்வளவு சுவை வூட்டுவதாகும்.
சிறந்த பொருள்களை அமிழ்தத்திற்கு இணையாகச் சொல்வர்,
அப்படிப்பட்ட அமுதத்தை விட சுவையான ஒன்று உண்டு என் கிறார் வள்ளுவர்,
அது என்ன தெரியுமா:
நம் குழந்தைகளின் பிஞ்சுக்கைகளால் கொடுக்கப்படுவது கூழ் ஆனாலும் அமுதத்தைவிட அது சுவையானதாம்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்  (64)

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலும், அந்த சுவையை விட தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது

No comments: