Friday, May 31, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 31

ஒரு அழகிய ஊர்.

அவ்வூரில் மக்களுக்கு குடிநீரை வாரி வழங்கும் ஒரு ஊருணி.

மக்கள் அனைவருக்கும் உயிர் வாழ தண்ணீரை வாரி வழங்கி, அவர்களின் வாழ்வில் இன்றியமையாததாக ஆகிறது அது.

அதுபோல பொதுமக்களின் நலம் வேண்டும் பேரறிவாளனின் செல்வமும் இருக்குமாம்.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு (215)

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது, ஊர் மக்கம் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

No comments: