Sunday, May 19, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 21

எதிர்பார்க்காமல், கைகளை சுட்டுக் கொண்டு விட்டோம்.தீக்காயம் ஏற்பட்டு விடுகிறது.அதற்கான மருத்துவரைப் பார்த்து..சிகிச்சை எடுத்துக் கொண்டுவிட்டால் அத்தீக்காயம் ஆறிவிடுகிறது.
அதேநேரம்...நாம் ஒரு வரிடம் கோபப்பட்டு அவரை வார்த்தைகளால் வதைக்கிறோம்.ஏனெனில், நம்மைப் போன்றோர்க்கு கோபம் வந்தால் என்ன பேசுகிறோம் என்பதேத் தெரிவதில்லை,.நம் நிலை மறந்துவிடுகிறோம்.
நேரம் செல்கிறது..கோபம் குறைகிறது.நாம் பேசியதெல்லாம் நினைவிற்கு வருகிறது.
"அடடா..கோபத்தில் அவர் மனம் புண்படுமாறு ஏதேதோ பேசிவிட்டோமே" என மனம் வருந்துகிறது.அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்கிறோம்.அவரும் பெருந்தன்மையுடன் மன்னிக்கிறார்.
ஆனாலும், நாம் பேசிய சொற்கள் அவர் மனதை விட்டு அகலாது..என்றும் அவர் மனதிலேயே நின்று விடுகிறது.
ஆகவே தான் நாம் பிறர் மனம் புண்படும்படிபேசிவிடக் கூடாது.
இதையே வள்ளுவர் சொல்கிறார்...

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு  (129)

ஒருவருக்கு நெருப்பு சுட்ட புண்கூட ஆறிவிடும்.ஆனால் வெறுப்பு கொண்டு திட்டிய சொற்கள் விளைவித்த துன்பம் ஆறவே ஆறாது

இக்குறளில் ஒப்பீடு இல்லையெனினும்..தீப்புண்ணையும், நாவினாற் சுட்ட வார்த்தைகளையும் சொல்லியிருப்பது சிறப்பு.

No comments: