Saturday, May 11, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும்- 16

துறவிகள் கடைப்பிடிக்கும் துறவு வாழ்க்கை மிகவும் போற்றப்பட வேண்டிய ஒன்று.
தன்னை வறுத்திக் கொண்டு நோன்பு இருப்பவர்கள்.
உலக நலனுக்காக ,பற்றுகளைத் துறந்தவர்கள் அவர்கள்.
பற்றறான் பற்றினை மட்டுமே பற்றியவர்கள்.
மிகவும் பெருமையடையும் செயல்இவர்களுடையது.
ஆனால் இதை விட பெருமையுடையதாக வள்ளுவன் ஒன்றினைக் கூறுகிறார்.

அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்யும் இல்வாழ்க்கையானது, துறவிகள் கடைப் பிடிக்கும் நோன்பினைப் போன்றதாம்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து (48)

தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்வோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பினை விட பெருமையுடையதாகும்

No comments: