Tuesday, May 14, 2019

வள்ளுவனும்...ஒப்பீடுகளும் - 18

ஒரு தாயின் அன்பும்..அரவணைப்பும்..மழலைப் பருவம் முதல்..தாயின் மறைவு வரை ஒரு மகனுக்கு (மகளுக்கு) தேவைப்படுகிறது.
அந்த அன்னையின் தியாகம் ஒப்பிடமுடியாத ஒன்று.
ஒரு குழந்தையை ஈன்றெடுக்க, அவள் படும் வேதனைகள்/வலிகள் எழுத்தில் வடிக்க இயலாது.
ஆனால்..அவ்வளவு வேதனையும்..வலியும்..அக்குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் அவளுக்கு மறந்து..மகிழ்ச்சி ஒன்றே ஏற்படும்.
அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை என நாம் அறிவோம்.
ஆனால்..வள்ளுவனுக்கோ..அந்தத் தாய்க்கு அப்போது ஏற்படும் மகிழ்ச்சியைக் காட்டிலும் வேறு ஒரு மகிழ்ச்சி அதிகமாய் இருக்கும் எனத் தோன்றுகிறது

அது என்ன தெரியுமா?

அவ்வளவு வலியுடன் பிறந்த குழந்தை, கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கி, ஊரார் அவனைப் பாராட்டும் போது ..பிறக்கையில் ஏற்பட்ட மகிழ்ச்சியை விட அதிகம் மகிழ்ச்சி ஏற்படுமாம்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் (69)

(நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது , அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்  

No comments: