Wednesday, May 29, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 28

இனிய சொற்கள் இருக்கையில், இன்னாத சொற்களைக் கூறுவதைப் பற்றிக் கூறிய வள்ளுவன்..ஒரு குறளில் சொல்கிறார்..

ஒருவன் இன்னா சொற்களைக் கூடக்கூறலாமாம்..ஆனால் பயனற்ற சொற்களைக் கூறக்கூடாது என்கிறார்.

பயனற்ற சொற்களைக் கூறாது மனதில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையேக் கூற வேண்டுமாம்.

அப்படியில்லாதவன், எப்படிப்பட்டவன் தெரியுமா?

"பதர்" போன்றவனாம்

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல் (196)

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட ,அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.


No comments: