Friday, May 24, 2019

வள்ளுவனும்...ஒப்பீடுகளும் - 24

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...

எல்லா உயிர்களும் சமமானவை.ஏற்றத் தாழ்வுகள் கிடையாது.

ஆனாலும்..அறநெறியில் செல்லாமல் தீயவழியில் செல்பவர்கள் கீழ்த்தரமானவர்கள் ஆவார்கள்.

அவர்களைவிட கீழ்த்தரமானவர்கள் உண்டாம்.அவர்கள் யார் தெரியுமா?

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்களாம்.

இதையே வள்ளுவன்..

அறங்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்  (142)

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள் ஆவர்

No comments: