Wednesday, May 22, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும் - 23

அவன்...

பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன்.அறிவாளி.மக்கள் அவனைப் போற்றிப் புகழ்கின்றனர்.

ஆனால்...அவன் வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவன்என்பதை அறிந்ததும்..

அவனை பாராட்டும் இவ்வுலகு..அவனை தூற்ற ஆரம்பிக்கும்.

அறிவாளியான அவனும் ஒரு அறிவற்றவனாகவேக் காணப்படுவான்...

இதையே வள்ளுவரும் சொல்கிறார்...

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார் (140)

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தாலும் அறிவற்ரவர்களே ஆவார்கள்

No comments: