Friday, May 31, 2019

வள்ளுவனும்..ஒப்பீடுகளும்- 29

தீ மிகவும் கொடுமையானது..

அழிவினை ஏற்படுத்தக்கூடியது.அதில் சிறு பொறி என்றோ..பெரும் நெருப்பென்றோ பாகுபாடு கிடையாது.

ஆதலால்தான் பாரதியும்..மரப்பொந்திடை வைத்த அக்கினிக் குஞ்சு பற்றிக் கூறுகையில்...தழல் வீரத்தில்  குஞ்சென்றோ..மூப்பென்றோ கிடையாது.சிறுபொறியும், ஒரு காடு வெந்துத் தணிய போதுமானது என்றார்.

ஆனால்..அப்படிப்பட்ட கொடிய தீயைவிட கொடியது ஒன்று உண்டாம்.அது..ஒருவருக்கு நாம் செய்யும் தீய செயல்கள் என் கிறார் வள்ளுவர்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் (202)

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களை தீயை விடக் கொடுமையானதாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்

No comments: