Saturday, October 19, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 60

மேன்மேலும் உயர்ந்திட வேண்டும் என விரும்புபவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும் என்று சொல்லும் வள்ளுவர் சொல்கிறார்...

தெலிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக் கூட இழிவான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்..

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று (655)

'என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக் கூடாது.ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று

செய்யற்க, செய்வானேல்,செய்யாமை...வள்லுவரின் சொல் விளையாட்டு

No comments: