Monday, October 21, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 86

ஒருவர் தகாத நடத்தையின் காரணமாக நாணுவத்ற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேற்பாடு உண்டு...

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற (1011)

நாணுதல்,நாணுத்திருநுதல்,நாணுப்பிற ....

அடுத்து

வெட்கப்படவேண்டிய அளவிற்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து (1018)

பிறர் நாணத் தக்கது, அறநாணத்தக்கது, தானாணானாயின்..

No comments: