Sunday, October 20, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 77

மனமாறுபாடு காரணமாக ஏற்படும் பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.

மனமாறுபாடு எனும் நோயை யார் தனக்ள் மனத்தைவிட்டு அகற்றிவிடுகிறார்களோ, அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.

இகல் எனும் அதிகாரத்தில் வரும் இரு குறட்பாக்களில் இப்படிச் சொல்லுபவர் சொல்கிறார்..

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின் (854)

துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான்.அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால் அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.


இன்பத்துள் இன்பம், துன்பத்துள் துன்பம்..இது வள்ளுவனின் விளையாட்டு.



No comments: