Saturday, October 19, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 61

சோம்பலை விட்டொழிக்க வேண்டும்..

தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்

முயற்சி செய்யாமல் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்

மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும் (608)

பெருமை மிக்க குடியில் பிறந்தவராயினும்,அவரிடம் சோம்பல் குடியேறிவிட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கி விடும்

மடிமை,குடிமை,கடிமை

No comments: