Sunday, October 20, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 74

பெரும் செல்வமாகஇருப்பினும் அது அருள் நெறியிலோ, அன்பு வழியிலோ வராத போது அதனை புறக்கணித்துவிடவேண்டும்,

என பொருள் செயல்வகை அதிகாரத்தில் கூறுபவர் மேலும் சொல்கிறார்..

அறம், பொருள்,இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.

உறுபொருள்,உல்குபொருள்,தெறுபொருள் என ஒரு குறளில் விளையாடுகிறார்.அந்த குறள்..

உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள் (756)

வரியும், சுங்கமும்,வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்

No comments: