Sunday, October 20, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு -79

நெருங்கிய உறவினரிடம் தோன்றும் உட்பகையானது அவர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பல துபங்களை உண்டாக்கும் என்கிறார் உட்பகை அதிகாரத்தில்.

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின் (881)

இனிமையாய்த் தெரியும் நிழலும்..நீரும் கூடக்கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையுமாகும்.

இன்னாத,இன்னா,இன்னாவாம், இன்னா...

அடுத்து

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு (882)

என்கிறார்.

வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடி கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வாள்போல்,கேள்போல்,அஞ்சற்க, அஞ்சுக, பகவரை, பகைவர்

  

No comments: