Saturday, October 19, 2019

வள்ளுவரும் சொல்வெளையாட்டும் - 71

எண்ணும், எழுத்துமாகிய அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்..என கல்வி அதிகாரத்தில் சொல்லுபவர் மேலும் சொல்கிறார்..

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க  அதற்குத் தக (391)

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவிற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.கற்றபிறகு அதன்படி நடக்க வேண்டும்

கற்க,நிற்க, கற்பவை, கற்றபின்

அடுத்த குறள்...

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிக்கு (392)

எண்ணென்ப,எழுத்தென்ப, கண்ணெண்ப

எண்ணும், எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

No comments: