Sunday, October 20, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 78

பகைத்திறம் தெரிதல்..

பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது.

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை (872)

சொல்லாற்றல் மிக்கவர்களை சொல்லேர் உழவ்ர் என்கிறார்.
வில்லேர் உழவர், படைக்கலன்களைக் கொண்ட வீரர்கள்..

படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம்.ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெரு மக்களுடன் பகை கொள்ளக் கூடாது 

No comments: