Monday, October 21, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 88

தனிப்படர் மிகுதி  இது அதிகாரம்.

தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாடஹ் பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.

காதலர்கள் ஒருவரை ஒருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.....என்கிறது இக்குறள்..

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி (1192)

வாழ்வார்,வீழ்வார்,வீழ்வார், அளிக்கும் அளி.

அடுத்து ஒரு குறளையும் பார்ப்போம்..

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின் (1194)

விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.

விழப்படுவார், வீழ்வார்,வீழப்படாஅர்.... 

No comments: