Saturday, October 19, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 65

வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் சொல்கிறார்..

நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது .

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் (52)

அடுத்து ...

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை (53)

இல்லது,இல்லவள், இல்லவள்....

இதன் பொருள்...

நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில்
எதுவுமே இருக்காது.  

No comments: