Saturday, October 19, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 62

பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர் (602)

குலம் சிறக்க வேண்டுமானால் சோம்பலை ஒழித்து,ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

மடியை,மடியா, குடியை,குடியா

அடுத்து..

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து (603)

என்கிறார்.

அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

மடிமடி, குடிமடி  ....அடடா...

No comments: