Sunday, October 20, 2019

வள்ளுவரின் சொல் இளையாட்டு - 82

அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொது மகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல் (912)

ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு போகமொழி பேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது

பயன் தூக்கி,நயன் தூக்கி, பண்பு,பண்பின்

அடுத்து....

புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்கள்

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள் (916)

தந்நலம்,புன்னலம்,பாரிப்பார்,பாரிப்பார்

மேற்கண்ட குறள்கள் வரும் அதிகாரம் வரைவின் மகளிர்.

No comments: