Saturday, October 19, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 69

களவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்..

களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதே கூடத் தவறிப் போகும்.களவினை , பார்க்காதவர்க்கோ புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.

கள்வார்க்குத் தள்ளும் உயர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு (290)

கள்வார்,கள்ளார்,தள்ளும்,தள்ளாது

கள்ளாமை அதிகாரத்தில் வருகின்றன இக்குறள்கள்.

மற்றொரு குறள்...

நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்.கொள்ளையடிப்போர் நெஞசமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.

அளவறிந்தார் நெஞ்சத் தரம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு (288)

அளவறிந்தார்,களவறிந்தார்,நெஞ்சம்,நெஞ்சம்

No comments: