Monday, October 21, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 87

இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர்  போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்க காதல் நோயும் பெருகுமாம்.

காதல் நோயை மறைக்கவும் முடியாதாம்..அதற்குக் காரணமான காதலரிடமும் நாண்த்தால் உரைக்கவும் முடியாதாம்.

படர்மெலிந் திரங்கல் அதிகாரத்தில் இப்படிக் கூறுபவர் மேலும் சொல்கிறார்...

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா  (1169)

இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவது போல தோன்றும் கொடுமை இருக்கின்றதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது.

கொடியார்,கொடுமை,கொடிய,நெடிய...

No comments: