Sunday, October 20, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டு - 72

முன் கூட்டியே எச்சரிக்கையாய் இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போலக் கருகிவிடும்....என குற்றங்கடிதல் அதிகாரத்தில் ஒரு குறளில் சொன்னவர் அடுத்து சொல்கிறார்...

முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்? என்கிறார் இக்குறளில்..

தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு (436)

தன் குற்றம்,பிறர் குற்றம், என் குற்றம்


No comments: