Sunday, October 20, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 80

உட்பகை அதிகாரத்தில் மேலும் இரு குறள்கள்..

உட்பகை அஞ்சித்தற் காக்க உறைவிடத்து
மட்பகையின் மானத் தெறும் (883)

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை மண்பாண்டத்தை அறுக்கும் கருவி போல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்.

உட்பகை, மட்பகை..

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது (886)

ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால்,அத்னால் ஏற்படும் அழிவினைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.

ஒன்றாமை,ஒன்றி,ஒன்றல்

No comments: