Wednesday, November 5, 2014

திருக்குறள் - காமத்துப்பால்- 1216 -1220



குறள்-1216

காதலனைக் தன் கண்களால் கண்டு ரசித்தவள் காதலி.இதயத்தின் வாசல் விழிகள் அல்லவா? அதன் வழி நுழைந்து அவள் இதயத்தில் இடம் பிடித்துவிட்டான் காதலன்.ஒருநாள் அவளைப் பிரிந்து செல்ல வேண்டிய சூழல்.பிரிகிறான்.இப்போது அவளது கனவில் வந்து அவளை வாட்டுகிறான்.எல்லாவற்றிற்கும் காரணம் கண்கள்தானே என கண்களைத் திட்டுகிறாள் காதலி

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். #1216

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருந்தால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பார்.

குறள்-1217

அவனை அவளால் மறக்க முடியவில்லை.தினமும் கனவில் வந்து அவளை வாட்டி வதைக்கிறான்.நேரில் வந்து பார்க்காதவன் கனவில் மட்டும் ஏன் வர வேண்டும்? என அன்பு இல்லா காதலனைப் பற்றி அன்பாக மனதில் திட்டுகிறாள்


நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.

நேரில் வந்து என்னிடம் அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து என்னை வருத்துவது என்ன காரணத்தால்?.

குறள்-1218
அவனைப் பிரிந்து இருக்கிறாள் அவள்.ஆனால் அவள் கனவில் வந்து தோள் டஹ்ழுவிக் கிடக்கிறார்.ஆனால் அவள் விழித்ததும் உன் மனதில் இருக்கிறேனே என மறைகிறார்.இந்த பெண்களுக்கு காதலர்கள் கனவில் வந்தாலும் துன்பம்..வாராவிடினும் துன்பம்

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.


தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் சாய்ந்து இன்பம் தருபவர், விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌.

குறள்-1219

காதலன், காதலி அன்பு என்றால் என்ன என அறியாத இளம் பெண்கள்..மணமான தன் தோழி காதலனைப் பிரிந்து வாடும் துன்பம் கண்டு...(அவள் துன்பத்திலும் இன்பம் உண்டு என அறியாது)காதலனை அன்பற்ற்வன் என ஏசுகிறார்களாம்.


நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.


குறள்-1220

காதலன் பிரிந்து சென்றதைக் கண்டு, அவன் காதலியிடம் அவன் உன்னைப் பிரிந்து செல்லலாமா? என ஏசுபவர்கள்..அவன் பிரிவை அவள் தாங்கும் படி கனவில் வருவதை அறியமாட்டார்கள்

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார்.. என் கனவில் அவர் வருவதை அறியமாட்டார்கள்

No comments: