Saturday, November 15, 2014

திருக்குறள்-காமத்துப்பால்-1276 முதல் 1280 வரை



குறள்-1276

என்றும் இல்லாதவாறு காதலியை ஆரத்தழுவுகிறான் காதலன்.அப்படி அவன் அவளிடம் காட்டும் அன்பு அவன் அவளைவிட்டு பிரியப்போகிறானோ என்னும் அச்சத்தை அவளுக்கு அளிக்கிறதாம்.

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

குறள்-1277
காதலன் காதலியை சற்றும் விருப்பம் இன்றித் தழுவுகிறான்.அது அவள் உடல் அறியவில்லையாம்.ஆனால் உள்லத்திற்குத் தெரிகிறதாம்.அதனால்தான் அவளது வளையல்கள் அதை உணர்ந்து கையிலிருந்து கழலுகிறதாம்

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.


குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை அவள் வளையல்கள் அவளுக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!.

குறள்-1278

இணைபிரியா காதலர்கள்.காதலன் அவளை நேற்றுதான் பிரிந்து சென்றுள்ளாம்.ஆனாலும்,,அப்பிரிவையும் தாங்கமுடியாது பசலை அடைந்து ஏழுநாட்கள் பிரிந்தாற் போல உள்ளதாம்


நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

நேற்றுத்தான் அவள் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், ஏழுநாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் அவளைப் பற்றிக் கொண்டதே.

குறள்-1279
அவன் பிரிந்து சென்றுள்ளான் என்பதை மெலிந்த தோள்களும், கழன்ற வளையல்களும் உணர்த்துவதால்..அவள் அவன் இருக்குமிடம் நோக்கிச் செல்ல தீர்மானித்துவிட்டாளாம்


தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது. #1279

பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

குறள்-1280

சாதாரணமாகவே தனது உள்ளம் சொல்வதை கண்களாலேயே சொல்லிவிடுவார்கள் பெண்கள்.ஆம்..அவர்கள் கண்களே பேசும்.அதுபோல காதல் ஆசையையும் கண்களால் உணர்த்தி..அதைத் தீர்க்குமாறு காதலனுக்கு சொல்லிவிடுவார்களாம்.

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.


காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண் தன்மை மேலும் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

No comments: