Wednesday, November 19, 2014

திருக்குறள்- காமத்துப்பால் 1301 மு தல் 1305 வரை



குறள்- 1301

அவள் அவனுடன் ஊடல் கொள்ளும் போது அவன் அடையும் வேதனை அவளுக்கு வேடிக்கையாய் இருக்கிறதாம்.ஆகவே அவனிடம் ஊடல் செய்து..அவன் துன்பத்தைப் பார்க்க ஆசைப்படுகிறால் இந்தக் காதலி

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது


( ஊடும்போது அவர் அடைகின்ற) காதல் துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து ஊடல் கொள்வாயாக

குறள்-1302

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பார்கள்.உண்ணும் உணவில் கூட உப்பின் அளவு சற்று அதிகமானால்..அதை அனுபவித்து உண்ணமுடியாது.அது போல கலவி இன்பத்திற்கும் ஊடல் வேண்டுமாம்.ஆனால் அதுவும் அளவோடிருத்தல் அவசியமாம்


உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

குறள்-1303

ஊடல் கொண்ட மனைவியிடம் ஊடல் நீக்கி கூட வேண்டுமாம்.அப்படியில்லாமல் கூடுவது ஊடல் துன்பத்தில் இருப்பவரை மேன்மேலும் வருத்துவது போலாம்.

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். #1303

தம்மோடு ஊடல் கொண்டவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரவழைத்தல் போன்றது.

குறள்-1304

ஒரு கொடிக்கு நீர் ஊற்றாமல் இருந்தால் அது வாட ஆரம்பிக்கும்.அதைவிட கொடுமையானது அச் செடியை அடியோடு அறுத்துப் போடுதல்.அதற்கு ஈடாகுமாம் ஊடல் கொண்டவளிடம் கூடாமல் போவது

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

ஊடல் கொண்டவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

குறள்-1305
அழகிய மனைவியின் ஊடல்தான் நல்ல பண்புகல் அமஒந்த கணவனுக்கு சிறப்பாகுமாம்.இருவரின் அன்பு ஊடல் அளவுடன் இருந்தால் கூடும் எனலாம்.

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே நல்ல பண்புகள் அமைந்த  காதலர்க்கு அழகு சேர்க்கும்.

No comments: