Monday, November 10, 2014

திருக்குறள்-காமத்துப்பால் -1241 முதல் 1245 வரை



குறள்= 1241

காதலனைப் பிரிந்து இருப்பதால் காதலிக்கு காமம் ஆட்டிப்படைக்கிறது.பசலை நோய்.அப்போது..தன் மனதிடம் அவள் கேட்கிறாளாம், "மனமே! என் நோய் தீர்க்கும் மருந்து ஒன்று சொல்" என.

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) என் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?.

குறள்-1242

காதலன்..அவளைப் பிரிந்து செல்கிறான்.திரும்ப எப்போ வருவான் எனத் தெரியவில்லை.ஆனால், நெஞ்சம் மட்டும் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறது.அதற்கு அவள் (தனக்குத் தானே!) அவள் ஆறுதல் சொல்கிறாளாம்.
எப்படி எனப்பார்ப்போம்.

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

மனமே! நீ வாழ வேண்டும்! (ஆதலால்)அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!.

குரள்-1243

அவளைப் பிரிந்து சென்ற அவனுக்கு அவள் மீது இரக்கமில்லை.ஆதலால்..என் மனமே ..நீ இறக்கவும் செய்யாது, அவர் வருவதை எண்ணி எண்ணி துன்பம் என்னும் நோயால் ஏன் வருந்த வேண்டும்?

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் தன்மை இல்லையே.

குறள்-1244

அவளது மனதிற்குத் தெரியும்.முதலில் காதலனைக் கண்டால் காணப்போவது கண்தான் என.இருந்தாலும்..தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்கிறாள்.எப்படி...
என் மனமே,  நீ அவரைக் காணச் சென்றால்..என் கண்களையும் எடுத்துச் செல்.இல்லையேல்..அக்கண்கள் என்னையே தின்னுவிடுவது போல என்னை வருத்தும் என்கிறாள்.


கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

குறள்-1245

அவள் அவன் மீது அன்புடன் இருக்கிறாளாம்.ஆனால்..அவளுக்கு அவன் மீது அன்பு இல்லையாம்.அதனால்..நாமும் வெறுத்து ஒதுங்க வேண்டும் என்றாள்..மனம் கேட்கவில்லையாம்..ஆம்..இதை யாருக்கு சொல்கிறாள்..தன் நெஞ்சுக்கே சொல்லிக் கொள்கிறாள்


செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

நெஞ்சே! நான் விரும்பி நாடினாலும் என்னை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணி அவரைக் கைவிட முடியும‌ோ?.

No comments: