Monday, November 10, 2014

திருக்குறள்-காமத்துப்பால் -1246 முதல் 1250 வரை



குறள்-1246
காதலிக்கு, காதலனுடன் ஊடல்.அதைக் கண்ட காதலன், சமாதானப்படுத்த வருகையில், கொஞ்ச நேரம் ஊடலை மறந்தாலும்..மீண்டும் ஊடலை விட்டுக் கொடுக்கமாட்டாலாம் .இதனால்..பாவம் காதலனுக்குக் கொடியவன் என்ற பெயரை வேறு ஏற்படுத்தி விடுகிறாள்

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. #1246

என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.


குறள்-1247

காதலிக்கு காதலன் மீதான காமத்தையும் விடமுடிஉஅவில்லை.அதைச் சொல்ல நாணமும் விடவில்லை.அதற்காக நான் என்ன செய்வேன் என தன் நெஞ்சையேக் கேட்கிறாள்

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.
குறள்-1248
காதலன், காதலியைப் பிரிகிறான்.ஆனாலும் அந்த பிரிவு துன்பத்தால் வருந்து அவர் நம் மீது அன்பு செலுத்தவில்லையே என அவனையே எண்ணிக் கொண்டிருக்கிறாளாம்.


பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. #1248
தெளிவுரை

என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய்..

குறள்-1249

மனதிற்குள் எவ்வளவோ வருத்தம்.காதலன் பிரிந்ததற்கு ஏதேதோ காரணம், கண்கள், நெஞ்சம் என ஒவ்வொன்றின் பேரிலும் வருத்தம்.கடைசியாக தன் மனதிற்கு கீழ்கண்டபடி ஆறுதல் சொல்கிறாள்


உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?.

குறள்-1250

அவளைக் கலந்து ஆலோசிக்காது அவன் பிரிந்து சென்றுள்லான்.அதை மனதில் எண்ணி எண்ணி மேலும் மேலும் மெலிகிறாள் இந்த நாயகி

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

No comments: